மரணம் கூட பயப்படும்
உன் மௌனம் கலையும் போது..
விடுதலை கொடு எனக்கு
உன் இதயச்சிறையிலிருந்து
அரசி போலிருந்தால்
இரக்கம் இறந்துவிடுமா!
இல்லை மறந்துவிடுமா!
உயிரோடு உறங்க முடியவில்லை
உறக்கமும் கனவானது பல நாள்..
நிரந்தர உறக்கம் ஒரு நாள்
அன்று நினைவாகும்…
என் கனவு..