கரம் கோர்த்து
நடந்திட
வரம் கிடைத்தது…
தாய்க்குப்பின்
‘தமிழ்’
——————————————————
தமிழே…! உன்னிடம்
வார்த்தை வரம் வாங்கி வந்தேன்..
உன் வார்த்தைகளை நான் காதலிக்க..
அந்த காதல் என்னை கவிஞனாக்குகிறது..
——————————————————
கவிஞன் என்று எண்ணி
நான் காணும்
கனவுகள் யாவும்..
நினைவாகவும்
நினைவுகள் யாவும்
நிஜமாகவும் ஆசை..
இதுவே நான் புரியும்
காதல் தவத்திற்கு வரம்..
——————————————————
வரம் வேண்டி தவம் இருப்பர்..
ஆனால் உன் வருகைக்காக..
தவம் இருக்கிறது..
என் விழிகள்…!
——————————————————
விழி அசைவிற்காக
தவம் இருந்த எனக்கு..
உன்னிடம் இருந்து கிடைத்த
ஒரே பதில்…
உன் மௌனம்…
——————————————————
மௌனம் இதழ்களின் தவம்..
தூக்கம் விழியின் தவம்..! எனில்
எனது வாழ்நாள் தவம்..
உந்தன் கரம் கோர்பது..
——————————————————