இந்த உலகம்
எனை தனிமைபடுத்தும் போதெல்லாம்
துணையாய் நிற்பது
உன் நினைவுகள் மட்டுமே
இந்த அகிலம்
எனை அழ வைக்கும் போதெல்லாம்
எனை அழைத்து அழ விடாமல்
பார்த்து கொள்ளவது
உன் நினைவன்புகள் மட்டுமே
எனை சுற்றி இருப்பவர்கள்
எனை சுற்றி விட்டு வேடிக்கை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு நேர்வழியை காண்பித்தவள்
நீ
என்று நினைக்கையில்
இன்றும் அதே வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறேன்
அன்று உன்னோடு
இன்று உன்னினைவுகளோடு
என்றோ
நாம் பேசி பழகியதை நினைத்துப்பார்க்கையில்
இன்றும் அதே சுவையோடுதான் இருக்கிறது
அந்த நினைவுகள்
உன் நினைவுகள்
இந்த நிஜ உலகத்தை நிழலுலகம் ஆக்கி
உன் நினைவுலகத்தை
எனக்கு மட்டும் நிஜ உலகமாய்
மாற்றிவிட்டது
என்றும்
உன் நினைவு நிஜ உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்…
நான் 🙂